உனை போல் வேறு எவரும் ,
என் மூச்சு காற்றின் உஷ்ணத்தை
300 டிகிரிக்கு உயர்த்தியதில்லை,
ஆதலினால் உனை காதலிக்கிறேன் ...
உனை போல் வேறு எவரும் ,
என் இருதயத்துடிப்பை இருமடங்காக்கியதில்லை,
ஆதலினால் உனை காதலிக்கிறேன் ...
உனை போல் வேறு எவரும் ,
என் இரத்த ஓட்டத்தை
வெள்ள பெருக்கெடுத்து
ஓட வைத்ததில்லை ,,
ஆதலினால் உனை காதலிக்கிறேன் ...
உனை போல் வேறு எவரும் ,
என் இரத்தசிவப்பணுக்களுக்கும் ,
வெள்ளை அணுக்களுக்கும் ,
இடையே உள்நாட்டு கலகம் ஏற்படுத்தியதில்லை ,,
ஆதலினால் உனை காதலிக்கிறேன் ...
உனை போல் வேறு எவரும் ,
என்னை இப்படி பக்கம் பக்கமாய் ,
கிறுக்க வைத்ததில்லை
ஆதலினால் உனை காதலிக்கிறேன் ...
No comments:
Post a Comment