உன்னை காதலிப்பேன் என்று
எட்டு வருடத்திற்கு
முன்பே தெரிந்திருக்குமோ
என் மனதிற்கும் ,மூளைக்கும் ,,,
அன்று முதலே
எழுத ஆரம்பித்துவிட்டது
உன்னைக்கான கவிதைகளை ......
முன்பு எல்லாம்
கவிதை மட்டுமே
எழுதி கொண்டிருந்தேன் ,,
உன்னை பார்த்த
பின்புதான்
காதலையும்
எழுதி கொண்டிருக்கிறேன் .....
உன் ஒவ்வொரு செய்கைக்கும்
கவிதை எழுதமுடியும் என்னால் ,
ஆனால் நீ என்னை
நிராகரிக்கும் செயலுக்கு
மட்டும்
ஊமையாகி போகின்றன என்
கவிதைகள் .....
நீ ஒவ்வொருமுறையும்
என்னை
நிராகரிக்கும் போதும்
என்னுள்
அதிகமாகிக்கொண்டே
இருக்கிறது
உன் மீதான காதலும்
உனக்கான கவிதைகளும் .....
போதும் பெண்ணே ,,
இப்படியே நீ மௌனமாய் என்னை
நிராகரித்துக்கொண்டே இருந்தால்
ஒரு வேலை நான்
கவிதை எழுதியே
தீர்த்துவிடுவேன்
என் கவிதைகளை .....!!!!
என் கவிதைகளுக்கு
கொஞ்சம்
கர்வம் அதிகம்
நான் உன்னை
காதலிப்பதற்கு முன்பே
கவிதை எழுத
ஆரம்பித்துவிட்டேன் என்று
ஒ கவிதையே கேட்டு கொள் ,,
பிரசவத்தில்
இரண்டாவதாய் உண்டாகும்
கரு முதலில் வெளிவருவது
அறிவியல் ,,
அது போல் நீயும் ,,
உன்னக்கு முன்பே
எனக்கு தெரியாமல்
எனக்குள் இருந்திருக்கிறது
அவளுக்கான
காதல் கரு
No comments:
Post a Comment