Saturday, June 19, 2010

அன்றொரு நாள்
கல்லுரி ஆலுவலகத்தில்
நண்பனுக்காக நண்பனுடன்
நான் நின்றிருந்த வேளை...

அவசர கதியில் வந்த நீ
கொஞ்சம் " பேனா " தரீங்களா
ஒரே ஒரு " sign " போட்டுதறேன் என்றாய் ...

அன்று பார்த்து அதிசயமாய்
என் சட்டை பையில்
ஒரு " புது பேனா முளைத்திருக்க " இருக்க
அதை உன்னிடம் கொடுத்தேன்


நீயோ அதை வாங்கி " உன் கையொப்பத்தை " இட்டு

ஒரு " மெல்லிய புன்னகையுடன் "
" தேங்க்ஸ் "
என்று சொல்லி விட்டு
என் பேனாவை
என்னிடம் திருப்பி
கொடுத்து விட்டு போனாய் ...


ஏனோ தெரியவில்லை

அன்று முதல்

வழிந்துகொண்டிருக்கிறது

என்னுள் இருந்து காதலும்
என் பேனாவில் இருந்து கவிதைகளும்...

.....................................................................................

இதற்கு முன்பு
இதே பேனாவை
கொண்டு ஏத்தனையோ
" கவிதைகள் " எழுதி இருக்கிறேன்..

ஆனால்,
என் இந்த பேனா எழுதிய
முதல் கவிதை
உன் " பெயராம் " ,,

என்னோடு சண்டை இடுகிறது என் பேனா !!!!!

No comments:

Post a Comment