அன்றொரு நாள்
கல்லுரி ஆலுவலகத்தில்
நண்பனுக்காக நண்பனுடன்
நான் நின்றிருந்த வேளை...
அவசர கதியில் வந்த நீ
கொஞ்சம் " பேனா " தரீங்களா
ஒரே ஒரு " sign " போட்டுதறேன் என்றாய் ...
அன்று பார்த்து அதிசயமாய்
என் சட்டை பையில்
ஒரு " புது பேனா முளைத்திருக்க " இருக்க
அதை உன்னிடம் கொடுத்தேன்
நீயோ அதை வாங்கி " உன் கையொப்பத்தை " இட்டு
ஒரு " மெல்லிய புன்னகையுடன் "
" தேங்க்ஸ் "
என்று சொல்லி விட்டு
என் பேனாவை
என்னிடம் திருப்பி
கொடுத்து விட்டு போனாய் ...
ஏனோ தெரியவில்லை
அன்று முதல்
வழிந்துகொண்டிருக்கிறது
என்னுள் இருந்து காதலும்
என் பேனாவில் இருந்து கவிதைகளும்...
.....................................................................................
இதற்கு முன்பு
இதே பேனாவை
கொண்டு ஏத்தனையோ
" கவிதைகள் " எழுதி இருக்கிறேன்..
ஆனால்,
என் இந்த பேனா எழுதிய
முதல் கவிதை
உன் " பெயராம் " ,,
என்னோடு சண்டை இடுகிறது என் பேனா !!!!!
No comments:
Post a Comment