Tuesday, June 29, 2010

ஆதலினால் உனை காதலிக்கிறேன் ...

உனை போல் வேறு எவரும் ,
என் மூச்சு காற்றின் உஷ்ணத்தை
300 டிகிரிக்கு உயர்த்தியதில்லை,
ஆதலினால் உனை காதலிக்கிறேன் ...

உனை போல் வேறு எவரும் ,
என் இருதயத்துடிப்பை இருமடங்காக்கியதில்லை,
ஆதலினால் உனை காதலிக்கிறேன் ...

உனை போல் வேறு எவரும் ,
என் இரத்த ஓட்டத்தை
வெள்ள பெருக்கெடுத்து
ஓட வைத்ததில்லை ,,
ஆதலினால் உனை காதலிக்கிறேன் ...

உனை போல் வேறு எவரும் ,
என் இரத்தசிவப்பணுக்களுக்கும் ,
வெள்ளை அணுக்களுக்கும் ,
இடையே உள்நாட்டு கலகம் ஏற்படுத்தியதில்லை ,,
ஆதலினால் உனை காதலிக்கிறேன் ...

உனை போல் வேறு எவரும் ,
என்னை இப்படி பக்கம் பக்கமாய் ,
கிறுக்க வைத்ததில்லை
ஆதலினால் உனை காதலிக்கிறேன் ...

Thursday, June 24, 2010

காதலி ...

முதலில் " என் கண்களில் "வந்தவள் ..

பின்பு " என் கனவுகளில் " வந்தவள் ...

இப்போது
என் எல்லா " கவிதைகளிலும் "......

காதல் ..

காதலித்து கொண்டிருப்பவானுக்கு
இது ஒரு " சுகமான வலி "

காதலில் செய்தவனுக்கும் ,
தோல்வியுற்றவனுக்கும்
இது ஒரு" ஞானம் "...

சும்மா வேடிக்கை பார்பவர்களுக்கு
இது ஒரு "வித்தியாசமான விளையாட்டு " ....

இவ்வுளவுதான் " காதல் "......

Saturday, June 19, 2010

அன்புள்ள ......வுக்கு .......

அன்புள்ள ......வுக்கு

தயவு செய்து
இந்த " காதல் கிறுக்கனை "
காதலித்து விடு ....

இல்லையேல் ,
இவன் கவிதை எழுதியே
அழித்துவிடுவான் போல்
எங்கள் இனத்தை ............

இப்படிக்கு
பேப்பர் மரங்கள்

என் கவிதை....

மரமாய்
பிறந்திருந்தால்

"அவள்
சுவாசிக்க "

காற்றை
வெளிவிட்டுகொண்டிருந்திருப்பேன் ,
ஆனால் ,,

மனிதனாய்
பிறந்ததால்

"அவள்
வாசிக்க "

"என் கவிதைகளை "
வெளிவிட்டுகொண்டிருக்கிறேன் ......

கவிதை...

கவிதை எழுவது ஒரு சுகம் ,

கவிதை-ஐ படிப்பதும் ஒரு சுகம் ,

கவிதை-ஐ பார்த்துகொண்டிருப்பதும் சுகம் தான் ,,,,


கண்டுகொண்டேன்
அவளை
கண்டுகொண்டிருந்த போது.......

தேவதை....

தன் தாயிடம்
" இருந்தும் "
அழுது கொண்டிருக்கும்
குழந்தை ,
உன்னை பார்த்தும்
சிரித்துக்கொண்டே
உனை எடுக்கசொல்லி
கை நீட்டும்பொழுது



எனக்கும் சந்தேகமாக தான் இருக்கிறது ,,,,,



ஒரு வேலை
நீ
நிஜமாகவே
"தேவதை" தானோ ?????

உன் மீதான என் காதல்....

இப்படி என் மீது உள்ள
காதலை எல்லாம்
இப்படி கவிதைகளாய்
எழுதி திர்த்துகொண்டிருக்கிராயே,
ஒருவேளை முற்றிலும்
திர்ந்துவிட்டால் என்ன
செய்வாய் என்றாய்??

ஒருவேளை நீ சொல்வது போல்
உன் மீதான என் காதல்
முற்றிலும் திர்ந்துவிட்டால் ,


கண்டிப்பாய்
என் உதிரம் உறைந்து போயிருக்கும்,
என் இமைகள் வேலை நிறுத்தம் செய்திருக்கும்,
என் இருதயம் துடிக்க மறந்திருக்கும் ,
என் மூளை முடங்கி போயிருக்கும் ,
என் விழி நிரந்தரமாய் விழித்தே இருக்கும்,

மொத்தத்தில்


" சுருக்கமாய் " சொன்னால்
நான் இறந்திருப்பேன்
" விளக்கமாய் " சொன்னால்
என் உடலை விட்டு
என் உயிர் பிரிந்திருக்கும் ,
என் உடலை " மட்டும் "விட்டு விட்டு
என் உயிர் பிரிந்திருக்கும் ....


அப்படியானால் என் பின்னால்
ஆவியாக அலைவாயா ?? என்றாய்

நீ காதலிப்பதாய் இருந்தால்
இந்த பாவி ,
ஆவியாக அலையவும் தயார்
என்றேன் .....


அதை கேட்டு என் நெஞ்சில்
முகம் சாய்த்து ஆழ ஆரம்பித்தாய்


என் மீது விழுந்த உன் விழி நீர் சூட்டில் உணர்ந்து கொண்டேன் ,,,

பெருகிகொண்டிருக்கிறது ,,,
உன் கண்ணில் இருந்து
கண்ணீரும் ,,
என் மீதான உன் காதலும் ........

என் காதலுக்கு ....

என் காதலுக்கு
என் மீதும் ,என் கவிதைகள் மீதும்
கோபமாம் ,,

என் கவிதைகளை
எப்படியாவது,யார்மூலமவது
அவளிடம் சேர்த்துவிடும் நான்
என் காதலை மட்டும் ,
இன்னும் அவளிடம்
சேர்க்காமல் ஏமாற்றுகிறேனாம்

ஏ காதலே ஒன்றை அறிந்துகொள் ,,,


கவிதை என்பது மொழி -இன் வடிவம் ,,
ஆனால்
காதல் என்பது உயிரின் வடிவம் ,,
உன்னை (என் காதலை) என்னால் மட்டுமே முழுமையாக
அவளிடம் சேர்க்க முடியும்.....


கவலை படதே
என் காதலே ,,
கண்டிப்பாய் அவளிடம்
சேர்த்து விடுகிறேன் உன்னை ,,

உன்னை அவளிடம்
சேர்க்காமல்
என்றுமே முழுமைபெறாது

என் கவிதையும் ,,
என் வாழ்வும் .....

என்னக்காக இல்லாவிட்டலும் என் கவிதைகளுக்க்காகவது என்னை காதலியேன் ...

உன்னை காதலிப்பேன் என்று
எட்டு வருடத்திற்கு
முன்பே தெரிந்திருக்குமோ
என் மனதிற்கும் ,மூளைக்கும் ,,,


அன்று முதலே
எழுத ஆரம்பித்துவிட்டது
உன்னைக்கான கவிதைகளை ......




முன்பு எல்லாம்
கவிதை மட்டுமே
எழுதி கொண்டிருந்தேன் ,,

உன்னை பார்த்த
பின்புதான்
காதலையும்
எழுதி கொண்டிருக்கிறேன் .....


உன் ஒவ்வொரு செய்கைக்கும்
கவிதை எழுதமுடியும் என்னால் ,

ஆனால் நீ என்னை
நிராகரிக்கும் செயலுக்கு
மட்டும்
ஊமையாகி போகின்றன என்
கவிதைகள் .....

நீ ஒவ்வொருமுறையும்
என்னை
நிராகரிக்கும் போதும்
என்னுள்
அதிகமாகிக்கொண்டே
இருக்கிறது

உன் மீதான காதலும்
உனக்கான கவிதைகளும் .....


போதும் பெண்ணே ,,
இப்படியே நீ மௌனமாய் என்னை
நிராகரித்துக்கொண்டே இருந்தால்
ஒரு வேலை நான்
கவிதை எழுதியே
தீர்த்துவிடுவேன்
என் கவிதைகளை .....!!!!

என் கவிதைகளுக்கு
கொஞ்சம்
கர்வம் அதிகம்
நான் உன்னை
காதலிப்பதற்கு முன்பே
கவிதை எழுத
ஆரம்பித்துவிட்டேன் என்று

ஒ கவிதையே கேட்டு கொள் ,,

பிரசவத்தில்
இரண்டாவதாய் உண்டாகும்
கரு முதலில் வெளிவருவது
அறிவியல் ,,

அது போல் நீயும் ,,
உன்னக்கு முன்பே
எனக்கு தெரியாமல்
எனக்குள் இருந்திருக்கிறது
அவளுக்கான
காதல் கரு

கனாக்காரன்

உன்னை "கண்களில்"
பார்ப்பதை விட
"கனவில்"
பார்க்கவே
ஆசை படுகிறேன் ...

கனவில்
மட்டுமே
நீ
"என்னவளாய் "
இருப்பதால் ..!!

உயிரெழுத்து....

உயிரெழுத்துக்கள்
மொத்தம்
" பன்னிரெண்டாம் "

யார் சொன்னது ??


உன் பெயர் மொத்தம்
" மூன்றெழுத்து " தானே !...........
அன்றொரு நாள்
கல்லுரி ஆலுவலகத்தில்
நண்பனுக்காக நண்பனுடன்
நான் நின்றிருந்த வேளை...

அவசர கதியில் வந்த நீ
கொஞ்சம் " பேனா " தரீங்களா
ஒரே ஒரு " sign " போட்டுதறேன் என்றாய் ...

அன்று பார்த்து அதிசயமாய்
என் சட்டை பையில்
ஒரு " புது பேனா முளைத்திருக்க " இருக்க
அதை உன்னிடம் கொடுத்தேன்


நீயோ அதை வாங்கி " உன் கையொப்பத்தை " இட்டு

ஒரு " மெல்லிய புன்னகையுடன் "
" தேங்க்ஸ் "
என்று சொல்லி விட்டு
என் பேனாவை
என்னிடம் திருப்பி
கொடுத்து விட்டு போனாய் ...


ஏனோ தெரியவில்லை

அன்று முதல்

வழிந்துகொண்டிருக்கிறது

என்னுள் இருந்து காதலும்
என் பேனாவில் இருந்து கவிதைகளும்...

.....................................................................................

இதற்கு முன்பு
இதே பேனாவை
கொண்டு ஏத்தனையோ
" கவிதைகள் " எழுதி இருக்கிறேன்..

ஆனால்,
என் இந்த பேனா எழுதிய
முதல் கவிதை
உன் " பெயராம் " ,,

என்னோடு சண்டை இடுகிறது என் பேனா !!!!!

நான் கடவுள்...

நான் - - ஏ கடவுளே நீ எங்கே இருக்கிறாய்
கடவுள் - -உஷ் சத்தம் போடதே போலீஸ் என்னை தேடிகொண்டிருக்கிறது ,நான் தலைமறைவாய் இருக்கிறேன்
நான் - - எதற்காக ??
கடவுள்- - ஒரு கெட்டவனை படைத்ததக்காக ,,
நான்- - அப்படி நீ படைத்த கெட்டவன் யார் ???
கடவுள்- - நீ தான் ....
நானும் தலைமறைவானேன்!!!!!

காணல் நீர்....

உன்னால் படிக்கப்படாத
என் எல்லா கவிதைகளுமே

காணல் நீர் தான் ,,

என் காதல் தாகத்திற்கு ......

காதல்த்தாள்

உன்னக்காக,உன்னை பற்றி
நான் எழுதிய
கவிதை தொகுப்புகளை
உன் பார்வைக்கு அனுப்பி வைத்தேன் ...

நீயோ கோபமாக திரும்பி வந்து ,,

இந்தா உன் வெற்று புத்தகத்தை
நீயே வைத்துக்கொள் என்று கொடுத்துவிட்டு போனாய்.....

புத்தகத்தை புரட்டிபார்த்தேன் ,,
என்ன ஒரு ஆச்சர்யம்
எல்லாம் வெள்ளைதாளாய்
இருந்தது,,,


என்னவளே நான் என்ன செய்வேன் ,,,


இந்த காகிதமும்
உன்னை காதலிக்கிறது போல் ,,

ஆகையால் தான்
உன்னக்காக நான் எழுதிய
கவிதைகளை எல்லாம் எங்கோ
ஒழித்து வைத்து விட்டு

உன் முன்னால் வெள்ளைதாளாய்
பல் இளிதிருக்கிறது.......
ஓரறிவுள்ள காகிதத்தையே காதலிக்கவைத்தவள் நீ ......


நான் எம்மாத்திரம் ??????