Saturday, June 19, 2010

காதல்த்தாள்

உன்னக்காக,உன்னை பற்றி
நான் எழுதிய
கவிதை தொகுப்புகளை
உன் பார்வைக்கு அனுப்பி வைத்தேன் ...

நீயோ கோபமாக திரும்பி வந்து ,,

இந்தா உன் வெற்று புத்தகத்தை
நீயே வைத்துக்கொள் என்று கொடுத்துவிட்டு போனாய்.....

புத்தகத்தை புரட்டிபார்த்தேன் ,,
என்ன ஒரு ஆச்சர்யம்
எல்லாம் வெள்ளைதாளாய்
இருந்தது,,,


என்னவளே நான் என்ன செய்வேன் ,,,


இந்த காகிதமும்
உன்னை காதலிக்கிறது போல் ,,

ஆகையால் தான்
உன்னக்காக நான் எழுதிய
கவிதைகளை எல்லாம் எங்கோ
ஒழித்து வைத்து விட்டு

உன் முன்னால் வெள்ளைதாளாய்
பல் இளிதிருக்கிறது.......
ஓரறிவுள்ள காகிதத்தையே காதலிக்கவைத்தவள் நீ ......


நான் எம்மாத்திரம் ??????

1 comment: