Sunday, July 17, 2011

களவாடியக் கனவுகள் ....


கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...
நான் உனை காதலிப்பது போல் ,,
நீயும் எனை காதலிப்பது போல் ,,
நம்மை காதல் காதலிப்பது போல் ,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

உனக்கும் எனக்கும் ஒரே ஒரு நிழல் இருப்பது போல் ,,
உன் நெஞ்சில் என் உருவத்தை நீ ஒட்டிக் கொண்டது  போல் ,,
என் கண்ணில் உன் உருவத்தை நான் பசைக்குத்தியது  போல் ,,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

உன் நினைவுகள்  என்னை ஆட்டிப் படைப்பது போல்,,
உன் கனவுகள் என் இரவுகளை உண்டுவாழ்வது  போல் ,,
நம் காதல் என் கவிதைகளை தின்று வளர்வது  போல் ,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

தேய்பிறை இல்லா நிலவு இருப்பதுப் போல்,,
நமக்குள் வார்த்தை ஜாலம் குறைந்தது போல்,,
உன் மௌனமும்  எனக்குப் புரிவது போல்,,,
புதிதாய் ஒரு மொழி நமக்கு தெரிந்தது  போல் ,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

நான் உனை மணமுடிப்பது  போல் ,,
காமம் முற்றிலும் குறைந்தது போல் ,,
காதல் முழுதாய் நிறைந்தது போல் ,,
ஆசைக்கு ஒன்று,,ஆஸ்திக்கு ஒன்று என இல்லாமல் ,,
அறிவாய் ஒன்று ,,அழகாய் ஒன்று என
இரு ஆண் குழந்தைகள் நமக்குப்  பிறப்பது போல் ,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

ஏன் பெண் குழந்தை வேண்டாமா என நீ என்னிடம் கேற்ப்பது போல்,,
அதற்க்கு தான் நீ இருக்கிறாயே என நான் சொல்வது போல்,, 
அதைக் கேட்டு  நீ காதலாய் என் மார்பில் சாய்வது போல் ,,,
என் இருதயம் கருவரையாய் மாறி உனை சுமப்பது  போல்,,
 கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

உனக்குள் எனையும் ,,எனக்குள் உனையும் ரசிப்பது போல்,,
இந்தக் கவித்தனமான வாழ்கையை நாம் வாழ்வது போல் ,,
முதலில் நீ இந்த மண்ணை விட்டு போவது போல்,,,
பின்பு என்னை விட்டுப் போவது போல்,,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

நீ இல்லாத என் உலகம் எப்படி இருக்கும் என
 இருபத்திநாலு மணிநேரம் மட்டும் நான் வாழ்ந்துபார்ப்பது போல்,, 
பின்பு நான் உன்னையே வந்து சேர்வது போல் ,,
எங்கு சென்றாலும் என் வாழ்வு உன்னிடமே வந்து முடிவது போல் ,,
கனாக்  கண்டேனடிநான் காதலி கனாக் கண்டேனடி...

பொதுவாய் கனவுகள் பலிககாதது  போல் ,,,
 இந்த கனவு பலிக்காவிட்டாலும் இப்படியே என் வாழ்நாள் இறுதிவரை தொடர்வது போல்,,,
மழை தின்று உயிர் வாழும் சக்கரபாண பறவை போல்,,,
இந்த கனவை தின்று நானும் ,என் காதலும் உயிர் வாழ்வது போல்,,,
கனாக்  கண்டேனடி காதலி கனாக் கண்டேனடி...

No comments:

Post a Comment